உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 12ம் நாள் மகோற்சவம் (Video) Share

2012-07-12 12:44:01 [views = 343]குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடர் லட்சுமி!

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.

திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் என்பது சிலர்  கூறும் விளக்கம்.


விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் 

இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு  மத்தியில் இன்று ஓடையம்பதி கற்பக விநாயகருக்கு திருவிளக்கு பூசையும் பூச்சப்பரமும் நடைபெற்றது 

கன்னி பெண்களும் சுமங்கலி பெண்களும் இரு கைகளாலும் திருவிளக்கை பிடித்து கொண்டு அன்ன நடையிட்டு வர அதன் நடுவே கற்பக விநாயகர் உள்வீதி வலம் வந்து பூச்சப்பரத்தில் ஏறி அமரும் நிகழ்வு கண் கொள்ளா காட்சியாக இருந்தது